திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, July 26, 2007

காதல்

பூக்கள்
பூக்கள் முகிழ்ப்பது போல காதலும்
முகிழ்க்கிறது ஒவ்வொரு வினாடியும்
பூக்களைப் போல காதலுக்கும்
ஆயுள் குறைவுதான் பூக்கள்
இதழ் மூடிக் காயாகி கனியாகி
மீண்டும் ஒரு மரத்தின் வித்தாக
மாறும் ஆனால் அது மீண்டும்
பூவாக முடியாது காதலும் அது போல
காதலிக்கும் பருவம் தாண்டி
கடி மணம் நிகழ்ந்த பின்
இல்லறத் தேன் அருந்தி
வம்ச விருத்தித் தவம் செய்யும்
மீண்டும் காதலாக , கன்னியாக ,
உருமாற முடியாது ,
பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை அன்புடன்
தோன்றுதல்தான் அழகு

அன்புடன்
தமிழ்தேனீ

பூக்களும் காதலும் ஒன்று
ஒரு முறை தோன்றுதல்தான் அழகு

நான் காதல் வேண்டாமென்று கூறவே இல்லை
காதல் நிச்சயமாக இருக்கிறது ,
உண்மையான காதலுக்கு ஆயுள் அதிகம்,
காதல் என்று மட்டும் இல்லையென்றால்
இந்தப் ப்ரபச்ஞ்ஜமே வளர்ந்திருக்காது


காதல் என்பது வேறு, பருவக் கிளர்ச்சி என்பது வேறு
இரண்டையும் சரியாகப் புறிந்து கொள்ளாமல்
பருவக் கிளர்ச்சியை காதல் என்று
எண்ணி ஏமாந்து போகவேண்டாம்
என்று தான் சொல்லுகிறேன்


இநத தவறான புறிந்து கொள்ளுதலால்
இயற்கையின் மாறுபாட்டால் உடற்கூறு
தன்மையால் , பாதிக்கப் படுவது பெண்களே
காதலித்த இருவருமே தங்கள் புனிதத்
தன்மையை கல்யாணத்துக்கு முன்னமே
இழக்கக் கூடாது,அப்படி இழந்த்தவர்கள்
அவர்களுக்கு குழந்தை பிறந்து
அது காதலிக்கும்போது பதறுகிறார்கள் ,

ஒவ்வொரு ஆணும்
(என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்)


தன் மனைவி பத்தினியாக இருக்க வேண்டும்
என்றுதானே நினைக்கிறான்


ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் தன்னைத்
தவிற வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல்
இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறாள்
அப்பொழுது கல்யாணத்துக்கு முன்னால்
நாம் எப்படி இருக்க வேண்டும் எனபதை
தீர்மானிக்க வேண்டுமல்லவா?
காதல் மிகவும் புனிதமானது
,
மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தாலும்
அவைகளின் மீது நமக்கு உரிமை கிடையாது
என்பதை நினைவில் வைத்துக் கொண்டு
காதலியுங்கள் ,கடைசீ வரை நன்றாக
இணைந்து வாழுங்கள் என்றுதான்
சொல்கிறேன்
மனிதர்களில் ஆணோ பெண்னோ
எல்லோருக்குமே நாலு நல்ல குணம்
இருக்கும், நாலு கெட்ட குணம் இருக்கும்
இதைப் புறிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு
பணிந்தோ,அல்லது இதமாகப் புரியவைத்தோ,
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து
கடைசீவரை இணைந்து வாழுங்கள்
இதுதான் காதல்


காதலித்து
ஒருவருக்கு ஒருவர்தான் என்று தீர்மானமாக
முடிவு செய்து இணைந்து,இயைந்து வாழ்வோம்
இணை பிரியாமல் வாழ்வோம்


காதலிப்போம், காதல் உண்டு காதல் நிச்சயமாக உண்டு
காதலையே காதலிப்போம்

காதலை,காதல் கவிதைகளை இரசித்து

முடித்த பிறகு என்னுள் எழுந்த

சிந்தனையை அப்படியே வடித்துள்ளேன்

சற்று அதிகப் ப்ரசங்கித் தனமாக தோன்றினாலும்

பொறுத்துக் கொண்டு யோசிப்போமே

காதல்

இது எத்தனை பேரை இப்படி கவிஞ்ஞனாக

மாற்றுகிறது, !!!!!!!!!! நானும் பார்க்கிறேன்

வாலிப வயது வந்தவுடன்

அதுவும் , ஒரு பெண்ணைக் காதலிக்க

ஆரம்பித்தவுடன்தான்,கற்பனை வருகிறது,

குழப்பம் வருகிற்து ,தெளிவு வருகிறது,

சிந்தனை வருகிறது ,சிரிப்பு வருகிறது

எல்லாம் வருகிறது,

அப்புறம் தான் செந்தமிழ் என்று ஒன்று

இருக்கிறது என்கிற ஞாபகமே வருகிறது

அப்புறம்தான் அவரவர் மொழியே

ஞாபகம் வருகிறது,அதற்குப் பின்தான்

கவிதை வருகிறது

கவிதை எழுதினாலே காதலைப் பற்றிய கவிதை

எழுதினால் தான் கவிஞ்ஞன் என்று ஒப்புக்

கொள்வார்களோ...? என்று பயம் வருகிறது,

எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்

எழுதுவதற்கு எத்தனையோ விஷயங்கள்

இன்னும் கற்பனை செய்யாமல்

கருத் தரிக்காமல் இருக்கிறது

காதலியுங்கள்,கவிதை எழுதுங்கள்

ஆனால் சிந்தியுங்கள்

நாமாவது சற்று மாறுபட்டு

தெளிவான, பொலிவான,வளமான,

எதிர்காலத் தேவை உணர்த்த

நாம் வாழும் முறையை புதுப்பிக்கும் படியான ,

நல்ல சிந்தனைகளைத் தூண்டும் வகையில்

கருத்துக்கள் தோய்ந்த கருக்களை ,

சிந்தனைக் கருக்களை உருவாக்குவோம்

பின் குறிப்பு:

(நானும் என் வாலிப வயதில் இப்படி யெல்லாம் செய்தவன்தான்,)

இது காதலைப் பற்றி என் அபிப்ராயம்

இப்போது நான் சொல்வது சிலரைப்

புண்படுத்தினாலும் அவர்கள்

என்னை மன்னிக்கட்டும்

ஆனால் நான் ஒரு பொதுக் கவி

மனதில் பட்ட உண்மைகளை மறைக்காமல்

சொல்லவேண்டும் என்ற என்ணமுடையவன்

என் அம்மா சொல்வார்கள்

"அழ அழச் சொல்பவர் தமர்

இதம் பேசுபவர்கள் த்ரோகிகள்" , என்று

நான் இதம் பேசப் போவது இல்லை

காதலிக்க ஆரம்பித்த்வுடனே நம்முடைய

மனது நம்மை அறியாமலே

கதாநாயக அந்தஸ்துக்குப் போய் விடுகிறது

நாம் காதலிக்கும் பொழுதே நம்மை

நம் சுயத்தை மறைக்க ஆரம்பித்து விடுகிறோம்

எது இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது

தம்மை அலங்கரித்துக் கொண்டு போய்

காதலிக்கிறார்கள்

தம்முடைய் உண்மையான அந்தஸ்த்தை மறைத்து

போலியாக நடித்து ஒருவரை ஒருவர்

ஏமாற்றிக் காதலிக்கிறார்கள்

ஆனால் காரியம் முடிந்தவுடன்

கசந்து போகிறது வாழ்க்கை

காதல் என்பதே இப்போது எனக்குத் தெரிந்து

இல்லை இல்லை இல்லவே இல்லை

வாழ்க்கையில் இணையாமலே பிறிந்து

போகிற காதல்எவ்வளவோ பரவாயில்லை

இணைந்த பிறகு தாம்பத்யம் ,

புனிதமான தாம்பத்யம்

இரு கைகள் இணைத்துக் இனி பிறியோம்

எத்துணை துயர் வரினும் என்று உறுதி பூண்டு

அக்னி தேவனின் முன்னாலே அத்தனை

பெரியவர்கள் முன்னாலே சத்தியம்

செய்து விட்டு அத்தனை பேரையும் முட்டாளாக்கி

தம்மையும் முட்டாளாக்கிக் கொண்டு

விவாகரத்து புறிகிறார்களே என்னால்

பொறுத்துக் கொள்ளவே முடியாத அக்கிரமம்

இத்தனைக்கும் காரணம்

காமத்தை காதல் என்று புறிந்து கொள்ளுதலும்

இயல்பான வாழ்க்கை நடைமுறை ஆர்வத்தை

காதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் தான்

என்னுடைய அகராதியில்

ஒருவரை ஒருவர் உண்மையாய்ப்

புறிந்து கொள்ளல் தான் காதல்

அது இது வரையில் ஏற்படவே இல்லை

எல்லா மனிதரிடமும் சில கெட்டவைகளும்

சில நல்லவைகளும் இருக்கும்

இந்த ரகசியம் புறிந்து கொண்டு இணைந்து

இணக்கமாய் வாழ்க்கையை ,இன்பமோ துன்பமோ

இருவரும் பகிர்ந்து கொண்டு வாழ்தலே காதல்

திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் இணைந்து

வாழ்ந்தாலும் முழுமையாக ஒருவரை ஒருவர்

புறிந்து கொள்ளுதல் முடியாது

இப்போது காதலித்து திருமணம் ,சில மாதங்களிலேயே

எல்லாம் புறிந்தாற்போல் விவாகரத்து

சரியே இல்லை

காதலின் அடித்தளமே சரியில்லை

புரிந்து கொள்ளுதலே காதலின் அடிப்படை

ஒன்றாக வாழ வேண்டும் என்று தீர்மானமாக

முடிவெடுத்து முதலில் தங்களுடைய குறைகளை

தெரிய வைத்து பின் தெளிய வைத்து

தெளிவாக காதலித்தால் மட்டுமே

காதல் இனிக்கும்

காதலித்து பின் திருமணம் புரிந்தாலும்,

திருமணம் நடந்த பிறகு காதலித்தாலும்(மனைவியை)
ஒரே ஒரு சபதம் எடுக்க வேண்டும் இருவரும்

ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்

வாழ்க்கைய தொடர,
காதலிக்கும் போது ஓரளவு புரிவது போல் இருக்கும்

ஆனால் புரியாது ,ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு

திருமணம் ஆன பின்னர் ஓரளவு புரியும்

ஆனால் ஒன்றும் செய்ய முடியாது, எப்படி இருந்தாலும் அதற்கேற்றார்ப் போல் நடந்து கொண்டு வாழ்கையை இனிமையாக நடத்த வேண்டும் இத்தனைக்கும் மேலாக
பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணமாக இருந்தாலும், காதலித்து தானே செய்து கொண்ட திருமணமானாலும் இந்த தலைவிதி என்று

ஒன்று இருக்கிறதே அது தன் இஷ்டம் போலத்தான் நம்மைஆட்டுகிறது இதுதான் யதார்த்தம்

இது தலை விதியை நம்புபவர்களுக்கு

மட்டும் பொருந்தும்

இது என் எழுத்தல்ல குமுறல்

இளைஞ்ஞர்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்

கொள்ளவேண்டுமே என்கிற எதிர்காலக் கவலை

உண்மைக் காதல் பெருகட்டும்

இப்படிக்குத்

தமிழ்த் தேனீ

பண்ட மாற்று,தள்ளுபடி அனியாயம

அன்பர்களே பல காலமாக ஒரு அனியாயம் நடந்து கொண்டிருக்கிறது
பொது மக்களை எல்லோருமே சுரண்டுகிறார்கள்
சமீபத்தில் என் மனைவி அரிசி வேகும் குக்கர் பண்ட மாற்று முறையில்
தள்ளுபடி விற்பனை நட்க்கிறது ,நாமும் அதில் பழைய குக்கரை
போட்டுவிட்டு புதியது வாங்குவோம் எனறாள்
நாங்களும் அந்த ப்ரபலமான அரிசி வேகவைக்கும் பாத்திரக் கடைக்கு சென்றோம்
அஙகே எங்களுடைய பழைய அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை
அடிமாடு விலைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுடைய புதிய
அரிசி வேகவைக்கும் பாத்திரத்தை அநியாயமான விலைக்கு எங்களிடம்
விற்றார்கள்
இது போல ஒவ்வொரு கடைக் காரர்களும் அவர்கள் விற்க்கும் பொருளுக்கு
உத்திரவாதம் கொடுக்கிறார்கள் ஆனால் கெட்டுப் போனால் அந்த யந்திரத்தின்
எந்த்த எந்த பாகங்கள் அடிக்கடி உடையுமோ கெட்டுப் போகுமோ அவையெல்லாம்
தவிர்த்து மற்ற பாகங்களுக்குதான் உத்திரவாதம் என்று சொல்லி மீண்டும்
நம்ம்மிடம்
அதிகப் பணம் வசூலிக்கிறார்கள்ு
நாம் பல வகையிலும் நட்டப் படுகிறோம்
வருடாந்திர உத்திரவாதம் கொடுக்கும் அத்தனை உற்பத்தியாளர்களும்
அவை கெட்டுப் போனால் அவைகளுக்கு எந்த பரிகாரமும் செய்வதில்லை
பணம் வாங்காமல்
அப்படியே நகை ,பொன் நகை அவைகளை நேற்று வாங்கி
இன்று அவர்களிடம் போய் திருப்பிக் கொடுத்தாலும்
நாம் கொடுக்கும் போதும் , வாங்கும் போதும் செய் கூலி சேதாரம் என்று
எல்லா செலவுகளையும் நம் தலையிலே கட்டி நம்மைக் கொள்ளை அடிக்கிறார்கள்
ஒரு சவரன் மோதிரம் வாங்கி ஒரு மாதம் தான் ஆகிறது
அதை மாற்ற வேண்டி கடைக்குப் போனோம்
அதே ஒரு சவரன் மோதிரம் புதியது அந்தப் பழைய மோதிரத்தின்
விலையை விட இரண்டாயிராம் ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி வந்தோம்
மக்கள் பணம் கொள்ளை அடிக்கப் படுகிறதே ,அனியாயமாய் மக்கள் ஏமாற்றப்
படுகிறார்களே இவற்றை எப்படித் தடுப்பது மிகவும் கொடுமை
அன்புடன்
தமிழ்த் தேனீ
http://www.thamizthenee.blogspot.com/

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராசதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

பயமும் ,தற்காப்பும்

சாதாரண நாம் செல்லமாக கொஞ்சி விளையாடும்
பூனை கூட ஒரு சந்தர்ப்பம் நேரும் போது புலியாக மாறும்

முய்ற்ச்சி செய்து பாருங்கள் ஒரு வீட்டில் வளர்க்கும் பூனையாக இருந்தாலும் சரி
அல்லது எங்கிருந்தோ நம் வீட்டுக்கு வந்து பாலைக் கவிழ்த்து
குடித்துவிட்டுப் போகும் பூனையாக இருந்தாலும் சரி

அந்தப் பூனனயை ஒரு அறைக்குள் போட்டு
பூட்டி விட்டு நிலைக் கதவு ,மற்றும் ஜன்னல்களை
தாழ்ப்பாள் போட்டுவிட்டு நீங்கள் அல்லது வேறு யார்
வேண்டுமானாலும் கையில் ஒரு குச்சியை வைத்துக்
கொண்டு மிறட்டிப் பாருங்கள்
சற்றே மிரளும் ,அப்புறம் ஒரு கட்டில் அல்லது மேஜை
அடியில் புகுந்து கொள்ளும், அங்கும் போய் அதை விறட்டும் போது
அதற்க்கு போக வேறு வழியே இல்லை என்னும் நிலை
உருவாகிவிட்டால் அது சற்றும் எதிர் பாராமல் நமக்கும் அத்ற்க்கும்
உள்ள சக்தி பேதங்களையும் மறந்துவிட்டு நம் மேல் பாயும்
அப்படி தப்பிக்கவே முடியாத நிலை உருவாகும் போது
பூனனயும் புலியாய் மாறும்
உண்மையில் அங்கு என்ன நடக்கும் தெரியுமா..?
தன்னை மிரட்டிய அந்த மனிதரை அந்தப் பூனை
தன் நகத்தாலும் பற்களாலும் கடித்துக் குதறிவிடும்
அம் மனிதன் பிழைப்பதே கடினம்
நம்ப்புவதற்க்கு சற்று கடினமாக இருப்பினும்
இதுதான் உண்மை
nessasity is the mother of invension என்பார்கள்
ஆமாம் தேவை,அவசியத் தேவை ,அவசரத் தேவை ,இவைகள் தான்
பல கண்டுபிடிப்புகளுக்கு மூலாதாரமாய் இருந்த்திருக்கிறது

ஆமாம் ஒரு பூனைக்கே இவ்வளவு பலம் வருகிறதே
இதே கருத்தை உதாரணமாகக் கொண்டு
தன்னைத் தாக்க வரும் ,அடாத வன் முறை செய்ய வரும்
ஆண் மிருகங்களை ஏன் பெண்கள் குத்தி கிழிக்கக் கூடாது..?
தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது..?

உயிருக்கு வரும் ஆபத்தை எதிர் கொள்ளவே பல்வீனமான
பூனை பலம் வாய்ந்த புலியாவ்து போல்
இயற்கையிலேயே சக்தி வடிவான பெண் ஏன் உயிரினும் மேலான
கற்பைக் காத்துக் கொள்ள புலியாகக் கூடாது..?



விசாலம் அவர்களே இறைவன் நம்க்கு பல உறுப்புகள்
அத்துடன் சிந்திப்பதற்க்கு மூளை எல்லாம் கொடுத்தாற்போல்
அந்தக் கறப்பான் பூச்சிக்கும் ,ஏன் எரும்புக்கும்,அத விட சிறிய
உயிர்களூக்கும் மூளை கொடுத்திருக்கிறான் இது படைப்பின் ரகசியம்
நீங்கள் அதைப் பார்த்து பயப் படுகிறீர்கள்
அதே நேரம் அது உங்களைப் பார்த்து பயப் படுகிறது
இதன் விளைவாகத்தான் விலகி ஓடும் எண்ணம் இருந்தாலும்
பயம் உங்களை அறியாமல் அதன் மீது உங்களையும்
உங்கள் மீது அதையும் வீழச் செய்கிறது
நீங்கள் பாட்டுக்கு சும்மா இருந்த்தால் பாம்பும் கடிக்காது
அசையாமல் இருந்தால் அது பாட்டுக்கு தன் வழியே நம் மீது ஊர்ந்து
போய்விடும் ,நீங்கள் பயந்த்து அசையும் போதுதான் அது பயந்து நம்மை கடிக்கிறது ,ஆகவே கடிப்பதும் கடிக்கப் படுவதும்
பயம், அல்லது தற்காப்பு உணர்ச்சியால்தான் என்பது என் கருத்து

அன்புடன்

தமிழ்த்தேனீ

உலகில் நல்ல சக்திகள்

கெட்ட சக்திகளும்,நல்ல சக்திகளும் உலகிலே நல்ல சக்திகள் எப்போதும் நம்மைக் காக்கின்றனஎன்னுடன் பணி புரிந்து கொண்டிருந்த திரு கமலநாதன்என்பவர் ஒரு சம்பவம் சொன்னார்அவர் இருசக்கர வண்டியில் பணிக்கு வந்து போவார் அவருடைய வீடு புதிய ஆவடி சாலைக்கு அப்பால்அவர் தினமும் இரவு பணி முடிந்து(அப்போது எங்களுக்கு பணி நேரம் மாலை4.45 முதல் இரவு 2.15 வரை)2.15 இரவு நேரம் அவர் புதிய ஆவடி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த சாலையின் முடிவில் ஒரு திருப்பம் வரும் , அங்கு போய்க் கொண்டிருக்கும் போதுதிடீரென்று அவருடய தலையை யாரோ அப்படியே அழுத்திஇரு சக்கர வண்டியின் கைப் பிடியில் அழுத்தி கொள்வதைஅவரால் உணர முடிந்திருக்கிறது ,தலயைத் தூக்கவே முடியாமலும் வண்டியை ஓட்டுவதை நிறுத்தவே இல்லை அவர், தலையை அழுத்திக் கொண்டிருந்த எதோ ஒரு சக்தி அவரைதிடீரென்று விடிவித்திருக்கிறது, அவர் தலையை தூக்குவதற்க்கும்அவரை தாண்டி ஒரு கன ரக வாகனம் பெரிய பின் இணைப்பு கொண்டது ,போனதைப் பார்த்திருக்கிறார் கமலநாபன்அப்புறம் தான் அவருக்கு உறைத்திருக்கிறது, அங்கு தடுக்கப் பட்ட ஒரு பயங்கரத்தின் விபரீதத்தை ஆமாம் கன ரக, பின் பெரிய இணைப்பு கொண்ட வாகனங்கள்திருப்பத்தில் திரும்பும்போது பின் இணைப்பு சற்று தாராளமாகவளைந்து திரும்பும்ஏதோ ஒரு நல்ல சக்தி அந்தக் கமலநாபனின் தலையை மட்டும்சரியான நேரத்தில் அழுத்தாமலிருந்தால் அவருடைய தலை தனியாகப் போய் விடும் அபாயத்தில் சிக்கி இருப்பார் அவர் செய்த புண்ணியமோ அவர்களுடைய பெற்றோர்கள்செய்த புண்ணியமோ அன்று அவரை ஒரு நல்ல சக்தி காப்பாற்றி இருக்கிறதுஆகவே என் அன்னை சொன்னது போல நல்ல சக்திகளும்தீய சக்திகளும் நிறைந்ததுதான் இப் ப்ரபஞ்ஜம்பேய் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றிய கற்பனைகள் தாராளமாகஉலா வருகிறது ,உண்மையில் பேய் ,பிசாசு ,இவைகளைப் பற்றிபேச ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்குகற்பனை பெருக ஆரம்பித்து விடும்அவரவர் ஒரு கதையை பலபேர்முன்னால் சொல்லிவிட்டு தனியே போகும் போது அவர் சொன்ன கற்பனைக் கதையை நினைத்துஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றுபயப்படுபவர்கள்தான் அதிகம்பயம் தான் பேய்,மனக் கிலேசம் தான் பிசாசு,தன் நம்பிக்கை இல்லாமைதான் பூதம்,மனத் தெளிவுதான் வரப் ப்ராஸதம் நம்பிக்கையோடு ,மனத் தெளிவோடு வாழ்வோம்

அன்புடன்
தமிழ்த் தேனீ

"பேய்கள் "ஒரு சம்பவம்

என் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்தது

லூகாஸ் டீ வீ ஸ் ஸில் நான் பணி புரிந்து
கொண்டிருந்த காலம்
வில்லிவாக்கத்திலிருந்து நடந்தே
பணிக்கு செல்வது அப்போதைய
என் பழக்கமாக இருந்தது

இரவுப் பணி
அப்போது இரவு 9.45 ல் இருந்து
காலை 7.15 வரையில்


ஒரு நாள் இரவு சற்று உடல் நலம் சரியில்லாத
காரணத்தால் அரை நாள் விடுப்பு எடுத்துக்
கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்
வரும் வழியில் ஒரு சுடுகாடு உண்டு

இரவு நேரம் 2.15 நள்ளிரவு , கும்மிருட்டு
தனியாக நடந்துவரும் போது சுடுகாட்டிற்க்கு
சற்று முன்னால் சாலையின் மறு பக்கத்திலிருந்து
ஒரு பெண் உருவம் சாலையைக் கடந்தது
இந்த நேரத்தில் ஒரு பெண் தனியாக செல்கிறாளே
யாரது அப்படிப்பட்ட தைரிய சாலி என்று பார்க்கலாம்
என்று வேகமாக அவளை நெருங்கினேன்
அவளை நான் நெருங்கிய வேளை
அந்தப் பெண் அந்த சுடுகாட்டில் அடைந்து விட்டாள்
திடீரென்று அங்கு அவளைக் காண வில்லை
ஆனால் எப்போதும் காயத்ரி ஜபம் செய்து கொண்டே
இருக்கும் எனக்கு எந்த பயமும் தோன்றவில்லை
எங்கு தேடியும் ஒரு பெண் அங்கு வந்ததற்கு
எந்த ஒரு அடையாளமும் இல்லாமல்
மீண்டும் இயல்பாக ஒரு கருமை இருட்டு
மட்டுமே அங்கு குடியிருந்தது
நான் வீட்டுக்குவந்து கை கால்
கழுவிக் கொண்டு , தூங்க ஆரம்பித்தேன்
காலையில் என் அம்மாவிடம் ,நடந்ததைக் கூறினேன்
அதற்கு என் அம்மா முதலில்
என்னிடம் கேட்ட கேள்வி
உன் மனதில் பயம் வந்ததா? என்பதுதான்
இல்லை என்று பதில் கூறினேன்
அதற்கு என் அம்மா ,அதுதான் நல்லது
எந்த ஒரு கணம் உன் மனதில்
பயம் வருகிறதோ
அங்குதான் கெட்ட சக்திகள்
மனதை ஆக்ரமிக்கிறது
உலகில் கெட்ட சக்திகளும் உண்டு
நல்ல சக்திகளும் உண்டு
உலகமே கெட்ட சக்திக்கும் நல்ல சக்திக்குமான
போரில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
நம்முடையம் மனம் தான் அந்தப் போர்க் களம்
ஆகவே மனதை கெட்ட எண்ணங்கள், அனாவசியமான பயங்கள் இல்லாமல் ,தூய்மையாக வைத்துக் கொண்டாலே ,பேயும் இல்லை பிசாசும் ,இல்லைஆண்டவன் என்னும் இயற்கைதான் என்றுமே நிலையானது என்று தெளிவு படுத்தினார்,
ஆகவே மனம் தெளிவாக இருந்தால்
பேய்கள் இல்லை என்பது தான் உண்மையோ
என்று தோன்றுகிறது,

பேய்கள் இல்லை
என்பதுதான் என் கருத்து

அன்புடன் தமிழ்த் தேனீ