திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, April 4, 2013

" நவீன ரோபோக்கள் “



http://www.vallamai.com/?p=33658

  • Wednesday, March 20, 2013, 5:06
பூம் பூம் பூம் பூம் ஐயாவுக்கு நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது  ,  ஐயா வீட்டுலே சுப காரியம் நடக்கப் போகுது, வூட்லே இருக்கறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கப் போறாங்க. என்று வாயிலில்  பூம்பூம் மாட்டுக்காரனின் குரல் கேட்டது.
கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார்  சபேசன், இவரின் தலையைக் கண்டவுடன்  பூம்பூம் மாட்டுக்காரன் நம்பிக்கையுடன் , குரலில் இன்னும் உத்வேகத்துடன்  ராகத்தோடு முழங்கத் தொடங்கினான் ,ஐயா எட்டிப் பாக்கறாரு தலையை ஆட்டுடா ராசா , ஐயா பழைய துணி காசு எல்லாம் குடுப்பாரு  என்று கூறிவிட்டு அவன் கையிலிருந்த  குட்டையான நாதஸ்வரத்தை  ஒலிக்கத் தொடங்கினான்.
மாட்டுக்கு என்ன புரிந்ததோ  அந்த  நாதஸ்வரத்தின் ஓசைக்கு ஏற்ப தலையை அப்பிடியும் இப்படியுமாக ஆட்டிற்று.  எப்போதுமே   மனிதருக்கு   யானை, குரங்கு , புலி சிங்கம் போன்றவைகளை மீண்டும் மீண்டும் பார்க்க ஆர்வம் வரும், அதே போல் சபேசனும் அந்த மாட்டையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.    ஐயா பாக்கறாரு தலையை வேகமா ஆட்டுரா ராசா என்றான் பூம் பூம் மாட்டுக்காரன், மாடும் வேகமாய்த் தலையை ஆட்டத் தொடங்கியது.
.ஏதோ ஒரு இரக்கம் தோன்றவே அவருடைய  பழைய வேட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தார்,  . பூம்பூம் மாட்டுக்காரன் ஐயாவுக்கு  நன்றி சொல்லுடா ராசா வேட்டி குடுத்தாரு மகராசன்  என்று கூறிக் கொண்டே அந்த வேட்டியை நிரந்தரமாக மாட்டுக்கே கொடுப்பது போன்ற பாவனையில் அந்த வேட்டியை மாட்டின் மேலேயே போட்டான்.
அந்த மாட்டின் மேல் பலவிதமான  வண்ண ஆடைகள் போர்த்தப்பட்டு இருந்தன.  அனேகமாய் அந்த  வண்ணத் துணிகளை எடுத்துவிட்டால் அதன் எலும்புகள் தெரியும் என்று தோன்றியது சபேசனுக்குகையோடு கொண்டு வந்த இரண்டு வாழைப்பழங்களை மாட்டுக்கு கொடுத்தார் சபேசன் , வாங்கிக்கோ ராசா ஐயா அன்போட குடுக்கறாரு என்றான் பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வாயைத் திறந்து தன்னுடைய  நாக்கை நீட்டி வாழைப்பழத்தை  கவ்விக்கொண்டு பூம்பூம்மாட்டுக்காரனிடமே  நீட்டியது பூம்பூம் மாடு.    ஆச்சரியமாய் இருந்தது சபேசனுக்கு , எப்படிக் கட்டுப் பாட்டோடு பழக்கி இருக்கிறான் இந்த மாட்டை என்று அதிசயித்துப் போனார் சபேசன்.
அதன் வாயில் தொங்கிக் கொண்டிருந்த வாழைப் பழங்களிலிருந்து  ஒரு வாழைப் பழத்தை எடுத்து உரித்து அவன் உண்டு விட்டு இன்னொன்றை மாட்டுக்கு கொடுத்தான் . மாடும் அதை தோலோடு உண்ணத் தொடங்கிற்று
அது சரி இயல்பாய் ஏதேனும் உண்ணக் கொடுத்தால் வாங்கி உண்ணுமே மாடுகள், இந்த மாடு  அவர் கொடுத்த வாழைப்பழத்தைக் கூட பூம்பூம் மாட்டுக்காரன் அனுமதித்த பிறகே  வாங்கி உண்கிறது, அப்படிப் பழக்கி இருக்கிறான் இந்த மாட்டுக்காரன்  என்று தோன்றியது.
ஒரு நவீனவகை ரோபோ போல் பூம்பூம் மாட்டுக்காரன் இடும் கட்டளையை எல்லாம் நிறைவேற்றியது  மாடு.  இவன் தன் வயிறு நிரம்ப இந்த  வேலையைச் செய்கிறான், இவனுக்கு  மனோவசியம் தெரிந்திருக்கிறது, நல்ல சொற்களைக் கூறினால்  மனதில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும், அந்த மகிழ்ச்சி எப்படிப்பட்டவரையும்   ஏதேனும் கொடுக்கச் செய்துவிடும் என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறான்.
நம்மில் பலர்  நல்ல சொற்களை கூறக் கூட தயங்கிக் கொண்டேதானே இருக்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காட்டிலும் ,ஏதோ ஒரு வகையில் இந்த பூம்பூம் மாட்டுக்காரன் சாதாரண மனிதர்களை விட  உயர்ந்தவன் என்று தோன்றியது சபேசனுக்கு.
சபேசனுக்கு நன்றி கூறிவிட்டு  மேலும் மற்ற வீடுகளுக்கு சென்று தன்னுடைய தொழிலைத் தொடர, நாதஸ்வரத்தை வாசித்தபடியே நகரத் தொடங்கினான் பூம்பூம் மாட்டுக்காரன், தலையை ஆட்டியபடியே பின் தொடர்ந்தது பூம்பூம் மாடு. உள்ளிருந்து கனகா,  யாரு வாசல்லே  என்றாள், யாரும் இல்லே பூம்பூம் மாட்டுக் காரன் வந்தான், அவனுக்கு ஒரு பழைய வேட்டியைக் குடுத்து அனுப்பினேன்  என்றார் சபேசன்.
அதெல்லாம் சரி காலம் கெட்டுக் கெடக்கு , வயசானவா நாம ரெண்டு பேரும் தனியா இருக்கோம், நீங்க பாட்டு தானம் தர்மம்னு கதவைத் திறந்து அவனுக்கு தானம் செய்யப் போறீங்க,   அவன் கையிலே வெச்சிருக்கற கொம்பாலே உங்களை அடிச்சுப் போட்டுட்டு  வீட்டிலே இருக்கறதை எல்லாம் எடுத்துண்டு போய்ட்டான்னா என்ன செய்யறது.
என்னைக் கேக்காம கதவைத் திறக்காதீங்கன்னு எவ்ளோ தடவை உங்களுக்கு சொல்றது, இனிமே இப்பிடி கதவைத் திறக்காதீங்க என்றாள்.  சரி சரி என்று வேகமாய்த் தலையை ஆட்டினார் சபேசன்,
பூம்பூம் மாட்டுக்காரன் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான், இவர்கள் வீட்டைத் தாண்டி செல்லும் போது  ஏனோ அந்த பூம் பூம் மாடு ஒரு முறை இவரை திரும்பிப் பார்த்துவிட்டு மேலே நடக்கத் தொடங்கியது.  ,
அன்று மாலை ,கனகா கதவைத்  தாப்பாள் போட்டுக்கோ  ,காலார ஒரு நடை நடந்துட்டு , அப்பிடியே காய்கறி வாங்கிட்டு வரேன்  என்றபடி  வெளியே வந்தார்  சபேசன்,   சற்று தூரத்தில் அந்த மாடு படுத்துக் கொண்டிருந்தது, பூம்பூம் மாட்டுக்காரன்  அரசாங்க மதுக் கடையில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் கண் விழித்து தனக்கு ஏதேனும் உண்ணக் கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன்  பூம்பூம் மாடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த மாட்டைக் கடந்து போகும்போது ஏனோ ஒரு முறை சபேசன் அந்த மாட்டைத் திரும்பிப் பார்த்தார். அதன் கண்களில் ஒரு இரக்கமும் , நன்றியும்  தெரிந்தது.
அன்புடன்
தமிழ்த்தேனீ

" ஆட்ரா ராசா "

                           "  ஆட்ரா  ராசா  "

“இது அரசியல் தொடர்பான கதை அல்ல, இந்தக் கதையில் வரும்கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல”“

கீழே இருக்கும் சாதாரண மக்களைப் பற்றிக்கவலையே இல்லாமல் பூமியைவிட்டுசற்று உயரத்தில் இருக்கும் மரங்கள், மலைகள்போன்றவற்றிலேயே  உலாவிவாழ்க்கையின் சுகங்களை அனுபவித்துதனக்கு வேண்டிய போது மட்டும் கீழே இறங்கிவந்து மக்களிடம்   இருக்கும்கனியை தட்டிப் பறித்து  மேலே சென்றுவிடும்குரங்குகள்.” ---தமிழ்த்தேனீ


                   "  ஆட்ரா  ராசா  "

ஏங்க தோட்டத்துப் பக்கம் போயி பாருங்க, காக்காய் கூட்டம்  கும்பலாபறக்குது, கா கா ன்னு ஒரே கத்தல் வேற என்றாள் அலமேலு,இதோ பாக்கறேன் என்றபடி எழுந்து சென்ற அவரை  ஒருசொக்காய் போட்டுண்டு போங்க, வெறும் உடம்போட போகாதீங்க ,பூச்சி பொட்டு இருக்கப் போறது என்றாள்அலமேலு.

சரி என்று ஒரு சொக்காயை எடுத்துமாட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் கதவைத் திறந்தார் வெங்கடேசன், ஒரு பெரிய  குச்சியை கையில் கொடுத்து இதை எடுத்துண்டு போங்க,  போனவாரம் ஒரு பாம்புவந்துதே அதிலேருந்து எனக்குபயமா இருக்கு என்றாள்.
ஒண்ணும் பயப்படாதே அலமேலு இந்த மாதிரிபாம்பு , பல்லி, எறும்பு,  கொசு குரங்கு இதெல்லாத்தோடயும் வாழக் கத்துக்கணும், இல்லேன்னா இந்தக்காலத்திலே வாழ முடியாது. நான் பாத்துக்கறேன் நீ இங்கேயே இரு என்றுகூறிவிட்டு தோட்டத்துக்கு போனார் வெங்கடேசன்.

ஜன்னல் வழியா அவரையேபயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அலமேலு.காக்காய்கள் ஒரு இடத்தைக் குறிவைத்துபறந்து பறந்து கத்திக் கொண்டிருந்தன.அங்கே உற்றுப் பார்த்தார் வெங்கடேசன், அந்த மரக் கிளையில்  ஒருகுரங்கு  இந்தக் காக்காய்களின் கூக்குரல்களினால் சற்றும்பாதிக்கப்படாமல் அலக்‌ஷியமாக உட்கார்ந்து ஒரு பப்பாளிப் பழத்தை தின்பதிலேகவனமாக இருந்தது.காக்காய்களுக்கு அந்தக் குரங்கு  மரத்திலேஇருக்கும்  தங்களின் கூட்டைக்கலைத்துவிடுமோ என்று பயம்.

 ஆனால் அவைகளின்பயமும் பல நேரங்களில் உண்மையாகிஇருக்கின்றதே,குரங்குகள் தங்களுக்குள்ளே ஏற்படும்விரோதங்களினால்   பல பிரிவாகப்பிரிந்து சுய லாபத்துக்காக அடித்துக்கொள்ளும்போதுஎதிர்ப்படும் எதைப் பற்றியும்  கவலைப்படாமல் சுயலாபத்தை மட்டுமே  கணக்கில்வைத்துக்கொண்டு  பல குருவிக் கூடுகளையும்,பல பறவைகளின் கூடுகளையும் பிய்த்துப்போட்டுவிட்டு சென்று விடுவது பலகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. 

அதனால் ஏற்பட்ட உயிர்ப் பயத்தாலும் ,தங்கள் குழந்தைகளைப்பற்றிய பயத்தாலும் காக்காய்கள் கும்பலாக ஒன்று கூடி குரங்கைத் துரத்துவதிலேகவனமாய் இருந்தன  ஐந்தறிவு மட்டுமே இருக்கும் இந்த பறவைகளின் உணர்வுகள் ஆறரிவுகொண்ட மனிதருக்கு  ஏன் வரவில்லை, மிருகங்கள்  பறவைகள்  இவைகளைப் பார்த்தாவதுமனிதர்கள் திருந்த வேண்டும்.

மனிதருக்கு இந்த ஒற்றுமை எப்போது வருமோஎன்று தோன்றியது அவருக்கு,  காக்காய்கள் உணவுண்ணும் போதும் உறவினர்களை அழைத்து பங்கிட்டுஉண்கின்றன, துன்பம் வரும் வேளையிலும் ஒன்றாகக் கூடி  எதிர்கொள்கின்றன.பாராட்ட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்வெங்கடேசன்,பப்பாளிப் பழத்தை ரசித்து உண்டுவிட்டுஅதன் தோலை விசிறி எறிந்து விட்டு மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்ததுகுரங்கு.ஏங்க அந்தக் குரங்கு எறங்கி வருது உள்ளேவந்துடுங்க என்று கூவினாள்அலமேலு,

   மதில் சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்துஇவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு இவரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல்நடந்து சென்று பக்கத்திலே இருந்த பீ எஸ் என் எல் கோபுரத்துக்கு தாவிஅதன் மேல் அனாயாசமாக கிடு கிடுவென்று ஏறி மேலே சென்று உட்கார்ந்துகொண்டது.

அப்போதுதான் கவனித்தார் வெங்கடேசன்அங்கே ஏற்கெனவே இந்தக் குரங்கின்  துணைவி உட்கார்ந்து கொண்டிருப்பதை. மேலே சென்ற குரங்கு கையில்வைத்திருந்த இன்னொரு பப்பாளிப் பழத்தை அன்போடு துணைவிக்கு கொடுத்துவிட்டு  தன்துணைவி  அந்தப் பப்பாளிப் பழத்தை உண்ணும் அழகை ரசித்த படியே  சாவகாசமாக உட்கார்ந்து  துணைவியாரின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.மீண்டும் வாசலில் காக்காய்களின்கூக்குரல் கேட்டது ,

அட என்னடா இதுதொந்தரவு என்று யோசித்துக் கொண்டேவெங்கடேசன் வாசலுக்கு வந்து பார்த்தார்,யாரோ ஒரு வடநாட்டு மனிதன் ஒரு குரங்கின்கழுத்தில்  கயிற்றில் கட்டி தன் தோளிலேஉட்காரவைத்துக்கொண்டு வந்து  ஒரு மேளத்தை அடிக்கத் தொடங்கினான்,குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும்கூட்டமாய்க் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.அந்தக் குரங்கு அந்த வடநாட்டான் கொடுத்த  ஒருவேர்க்கடலையை தின்றுவிட்டு அவன் சொல்வதையெல்லாம் செய்யத் தொடங்கிற்று.

அவன் வைத்திருந்த கொம்பில் தலை கீழாகதொங்கியும், அந்தக் கொம்பை தன் தோளிலே வைத்துக்கொண்டுகுட்டிக் கரணமடித்தும் வேடிக்கை காட்டியது. எப்படியும் இந்த மனிதன் தன்பசிக்கு வேண்டியதை கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன் ஆடுடா  ராசாஆடுடா ராசா என்று அவன் கொடுக்கும் குரலுக்குத் தகுந்தவாறு அவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தது.வேடிக்கை பார்க்கும்  மக்களையும், ஆடும் அந்தக்குரங்கையும் ,  பீ எஸ் என்எல் கோபுரத்தின்  உச்சியிலிருந்துஅந்த இரு குரங்குகளும் வேடிக்கைபார்க்கத் தொடங்கின.

ஒரு வேர்க்கடலைக்காக வேடிக்கை செய்துஉயிர் வளர்க்கும் இந்தக் குரங்குஎப்போது கோபுரத்தை நிமிர்ந்துபார்க்கும்? எப்போது தான் அடிமைப்பட்டிருப்பதை உணரும் என்றுஎண்ணமிட்டபடியே உள்ளே வந்தார் வெங்கடேசன்.தொலைக் காட்சியில் ஒருவர் பாம்பு போல்  வேடமிட்டுஆடிக்கொண்டிருந்தார், மற்றொருவர் சிங்கம்போலவும்,புலி போன்றும் உடலில் வண்ணங்களைப்பூசிக்கொண்டு புலிஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.

மீண்டும் வாசலில் ஒரு குரல் ஒரு மனிதன்முட்ட முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு டேய் யாரும் நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது ,எவனாவது கிட்டே வந்தீங்க குடலைஉருவிடுவேன், நான் குடிச்சிருக்கேனுபாக்கிறியா? எவ்ளோ குடிச்சாலும்நான் ஸ்டடியா இருப்பேன், பாரு  எப்பிடிநேரா நடக்கறேன் பாரு , கொஞ்சம் கூடத் தள்ளாடமாட்டேன் என்றாவாறு தள்ளாடித்தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.

எல்லா மிருகங்களின் வேடமும் , பாம்பு போன்றவைகளின்வேடமும் மனிதருக்கு பொருந்துகிறதே. எந்த ஒரு மிருகமோ மற்ற எந்த ஜீவராசிகளுமோ ஏன்மனித வேடம் போடுவதில்லை என்று யோசித்தார் வெங்கடேசன்.

அன்புடன்
தமிழ்த்தேனீ எழுத்தாளர், நடிகர்