உனக்கும் பெப்பே
உங்கப்பனுக்கும் பெப்பே என்று முன் காலத்தில்
ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால்
அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா
என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு
வந்தது . பிறகு அயல் நாட்டாரைப்
பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான்
அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.
திசை தெரியாமல் குழம்பி திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை ஏன் இப்படி பேபே என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும்
விழித்துக் கொண்டிருக்கிறோம் ஆற்றில் ஒரு காலும்
சேற்றில் ஒரு காலுமாய். இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக் கலாச்சாரமும் அழிந்து போகும் என்பதில்
சந்தேகமில்லை. ஆமாம் நாம் என்னதான் செய்து
கொண்டிருக்கிறோம்.
Contact No : 9840884088 Email : rkc1947@gmail.com , http://thamizththenee.blogspot.com